Sunday, January 19, 2014

மாதவம் செய்திடல் வேண்டும்




 VISHNU MATRIX by VISHNU108


மாதவம் செய்திடல் வேண்டும் 
மாதவனே உன்தாள் பணிய -மூங்கில்
போன்ற தோளுடையா னகமலர்வான்
மாலை மலர்கள் தூவ

நீடு வாழ்ந்திட நிதமும்  
சேவிக்க வேணுமும் நாமம்
நீற ணிந்தால் நெற்றியிலே
பாழ் படுமே பாவம்

ஆழிக் கடலில் வீற்றிருந்து
ஊழித் தீயை அணைப்பாய்
பேரழிவை தடுத்திடவே
தோன்றிடு வாய் விருப்பாய்

வேழம் வளர்ப்பது போல் 
தோன் றிடாது வாழ்வு 
வீழும் வாழ்வை காத்திடவே -துயர்
வீழும் பார்வை வீசிடவே

பாழும் உலகில் நாளும்
கொடுமை தணிய வேண்டும்
கொடுங் கூற்றன்கூட கண்டு
விலகி ஓட வேண்டும்

பாம்பின் மீது பள்ளி
பார்த்திபன் ஏன் தள்ளி
தீபம்ஏற்ற நீயும் எமை 
திரும்பி பார்க்க வேண்டும்

ஊடுருவி எம் உணர்வில் 
உயிரில் கலக்க வேண்டும்
உறைந்திருக்கும் ஊழ் வினையோ 
உருகி ஓட வேண்டும்                             



 GOVINDA'S FLUTE by VISHNU108

கார் குழலை கண்டதுமே
பின்இழுப்பாய் கார்மேக கண்ணா
வெண்ணெய் திருடி உண்ணும்
வேய்ங்குழல் ஊதுகின்ற வண்ணா

 


மாதர் சூழும் போது
மலர்ந்திடும் உம் வதனம்
ஆண்டாள் சூடிக் கொடுத்த 
மாலை சூடிக் கொண்ட போதும்

மாதங்களில் மார்கழியே உம்
மனதிற் கினிய மாதம்
மாதர்களும் மகிழ்ந்து பாடி
துயில் எழுப்பும் நேரம்

தீயினிலும் கலந்தி ருப்பாய்
தூணிலும் நிறைந் திருப்பாய்
பாரினிலும் பரந்து இருப்பாய் -பேரொளியாய்
உள்ளத்தே உறைந்திடுவாயே

22 comments:

  1. மாதவம் செய்திடல் வேண்டும்
    மாதவனே உன்தாள் பணிய!..

    அழகான கவிதை.. மகிழ்ச்சி!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே !

      தங்கள் உடன் வருகை மிகுந்த உவகை தரும்
      ஊக்கமதை ஊட்டிடும் நிஜமாய்!

      மிக்க நன்றி ...! வாழ்க வளமுடன்....!

      Delete
  2. ஊடுருவி எம் உணர்வில்
    உயிரில் கலக்க வேண்டும்
    உறைந்திருக்கும் ஊழ் வினையோ
    உருகி ஓட வேண்டும்

    உள்ளம் நிறைந்த பிரார்த்தனை..!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி !
      மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      வாழ்க வளமுடன்.....!

      Delete
  3. அழகான அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே !
      தவறாமல் வருகையும் ஊக்கமும் தந்து கருத்தும் வாழ்த்தும் இட்டு விடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
      மிக்க மகிழ்ச்சி சகோதரரே...!
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  4. படங்களும் கவிதை வரிகளும் வெகு சிறப்பு !
    வாழ்த்துக்கள் தோழி இனியா மாதவம் செய்திடல்
    வேண்டும் மாயக் கண்ணனவன் திருவடிகளைப் பணிந்திடவே .

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி ! ரொம்ப மகிழ்ச்சி
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி......!

      வாழ்க வளமுடன்....!

      Delete
    2. வாருங்கள் தோழி !
      தங்கள் வருகையும் கருத்தும் எப்போதும் தரும் தென்பு.
      மிக்க மகிழ்ச்சி அம்பாள் ....! வாழ்க வளமுடன்....!

      Delete
  5. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    எம்மதமும் சம்மதமும் என்பது போல் எல்லா தெய்வங்களையும் கவியால் அர்ச்சனை செய்யும் தங்கள் கலைதிறன் வியப்பாக இருக்கிறது. மிக அருமையான வரிகள். அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பிறக்க உங்களது வேண்டுதல் உதவட்டும். பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா !
      ஒவ்வொரு முறையும் மனமுவந்து வழங்கும் கருத்துக்கள் என் நெஞ்சை தொடும். ஊக்கம் தரும் வகையிலேயே அவை அமைந்திருக்கும்.
      மிக்க நன்றி சகோதரா ....!
      எல்லா நலன்களும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன்....!

      Delete
  6. வணக்கம்
    அம்மா
    நல்ல வார்த்தைகள் கலந்திருக்கு
    எங்கள் ஆழ்மனதில் நிறைந்திருக்கு
    வாசக உள்ளங்களுக்குஉணர்வு மிக்க கருத்துக்கள்
    உள்ளத்தில் தங்கள் கவி நிறைந்திருக்கு

    என்ன வரிகள் அம்மா... சிறந்த கருத்தாடல் மிக்க வரிகள்...இந்த வலையுலகில் மேலும் பல கவிதைகள் மலர எனது வாழ்த்துக்கள் அம்மா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் !
      தங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த உற்சாகத்தையும்.மேன்மேலும் கவிதை எழுத உந்துதலாகவும்
      உள்ளது.
      கண்ணனின் மென் பார்வை உந்தனை நோக்கிட
      சந்ததி காத்திடும் சர்வமும் நிலைத்திடும்....!

      மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன் ....!

      Delete
  7. இறையும் மறையும் இனிதாகும் வாழ்வில்
    நிறையும் குணத்தாள் நினைவில் - முறையே
    பெருகும் தெளிவு பொழியும் தமிழைத்
    தருவின் இளமாய் தளிர்த்து !

    அருமை சகோ
    எல்லா கடவுளையும் ஒருமித்த
    ஒரே கவிதை அருமை அருமை
    வாழ்த்துக்கள்
    தொடரட்டும் கவிப்பயணம்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சீராளா!
      வெகு நாட்களின் பின்னர் வருகை மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மன நிறைவு தரும் கருத்தும், மனம் நெகிழ்ந்தது.

      கண்ணன் குழல் ஓசையாய்
      உள்ளம் மகிழ்வாய் வெள்ளம்
      என பெருகி வரும் கள்ளமற்ற
      கவிதைகளை தந்து நிறைவாய்...!
      மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்.....!

      Delete
  8. வடிமமைப்பு அருமை
    படத்தேர்வும் அருமை
    கவிதை செழுமை...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மது! வாருங்கள்.
      வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  9. கவிதை அழகு.


    பாடுவேன்.

    சற்று நேரத்தில் யூ ட்யூபில் வரும்.

    உங்கள் இ மெயில் ஐ. டி.தந்தால் நேரடியாக அனுப்புகிறேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் தாத்தா மிக்க நன்றி...!
      தங்கள் வலைப் பக்கத்தில் இட்டுள்ளேன்.
      தங்கள் கருணைக்கு தலை வணங்குகிறேன் தாத்தா.
      எல்லா நலன்களும் பெற்று நிறைவுற வாழ வாழ்த்துகிறேன்....!

      Delete
  10. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

    அருமை சகோ..!!!

    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete
  11. கவிதை வரிகள் அருமை. படங்களும் வரிகளும் போட்டிபோடுகின்றன யார் மிக அழகு என்று.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. பறவாய் இல்லை சகோதரா அழகில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு சந்தோஷம் தான் ஹா ஹா.! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா !
      இனியா குட்டி என்ன செய்கிறார் நலம் தானே!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.